Saturday, January 14, 2012

மனிதன் தான் பிறந்தவுடன் தேடுவது

மனிதனின் தேடல்களை யாராலும் புரிதுகொள்ள முடியாது!


மனிதன் தான் பிறந்தவுடன் தேடுவது உயிர்முச்சு!
வளர்ந்தப்பின் தேடுவது படிப்பும்,மகிழ்ச்சியும்,
இவை இரண்டும் முடிந்தபின் அவன் தேடுவது வாழ்கை,
வாழ்கை என்று வரும்போது பல கனவுகளும் ஆசைகளும் பிறக்கின்றன 
அவனின் ஆசைகளும், கனவுகளும் தேடல்கலாகிறது. 
அவனின் தேடல்கள் நிறைவேறும்போது மகிழ்கிறான் 
நிறைவேறா தேடல்களை கனவில் மட்டும் தேடிகொண்டே இருக்கிறான்!  


Sunday, January 8, 2012

மரணம் பற்றி எழுத தோன்றியதால் என்னமோ
வாழ்வின் துயர எண்ணங்கள் ஞாபகத்திற்கு வருகின்றது
பிறந்தோரை விட மரணித்தவர் பாக்யவான்கள்
வாழ்வோரை விட பிறக்க துடிப்போரின் நிலைமை யாருக்கு தெரியும்
பிறப்பு மரணத்தை மட்டும் குறிப்பதில்லை வாழ்வின் சோகத்தை
பிறந்தவுடன் தெரிவிகின்றது மழலைன்[child] அலறல்!
நம் எல்லோரின் வாழ்வும் ஒரு மலரை போன்றது!
மலரானது எப்போது வடிபோகும் என்று சொல்வது எளிது!
ஆனால் மனிதனின் வாழ்வை மட்டும் சொல்ல முடியாது.
மனிதனின் துயரங்கள், வேதனைகள் எப்பொழுது வருமென்று
நாம் மகிழ்வுடன் இருந்தால் பிறரையும் மகிழ்விக்க நினைப்போம்
நாம் துயரத்துடன் இருந்தால் அதை நமக்குள் மட்டும் வைப்போம்
பிறப்பும் மரணமும் ஒருமுறைதான் அதனால் இடைப்பட்ட வாழ்வில்
ஒருவருக்கொருவர் மகிழ்வினை பகிர்வோம் துயரம் அது நமக்குள் இருப்பதே நலம் நலமுடன் வாழ்வது மட்டும் வாழ்வல்ல பிறரையும் வாழவைப்பது தான்
வாழ்வின் இருதிப்பயனமாக இருக்கட்டும்.